வெள்ளி, 17 ஜூன், 2011

தொலைந்த மனம் ...

சிறு கை நீட்டி ...

சின்னப் புன்னகை காட்டி ...


குட்டிக் கால்களால் எட்டி ...


குட்டிக் கண்களால் சிமிட்டி ...



கொஞ்சிக் குழாவிடும்

உந்தன் இதழ் விரிப்பில் ...



கெஞ்சித் தவிப்பது

எந்தன் நெஞ்சம் மட்டுமல்ல ...



உந்தன் சிறு விரல் பற்றி

நடந்த நம் முதல்

மணல் பயணம் ...



இப்படியாக .....................

என்னைக் கொள்ளையிட்ட

உந்தன் பகல் கொள்ளையில் ...



தொலைந்து போனது

எந்தன் இதயம் மட்டும் அல்ல ...

என் வாழ்க்கையும்தான் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக