வஞ்சிக் கொடி ஒன்று
கெஞ்சலாய் ...
வாடித் துவண்டிருந்தாள் !
வாஞ்சையாய்
கேட்கையில் ...
துடித்து அழுதாள் !
ஆறுதல் என்ற
அரும் மருந்தால் ...
அன்யோன்யம் ஆனாள் !
ஊன்று கோலாய்
நான் நிற்க ...
என்னையே பற்றி படர்ந்தாள் !
சான்று சொல்ல
நினைக்கையில் ...
அன்னியப் பார்வையில் ஐக்கியமானாள் !
கசங்கிய அவள்
கண்ணை ...
கசக்கியபடி வந்து சேர்ந்தாள் !
வருந்தி அழுததில்
என் இதயம் ...
ஓட்டை ஆனது !
வழிந்த என்
ரத்தத்தில் ... - மீண்டும்
வளரத் துவங்கினாள் !
அந்த வஞ்சிக் கொடி ...
நானோ கேள்விக் குறி !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக