வெள்ளி, 24 ஜூன், 2011

காதல் தீதா?


வஞ்சிக் கொடி ஒன்று

கெஞ்சலாய் ...

வாடித் துவண்டிருந்தாள் !



வாஞ்சையாய்

கேட்கையில் ...

துடித்து அழுதாள் !



ஆறுதல் என்ற

அரும் மருந்தால் ...

அன்யோன்யம் ஆனாள் !



ஊன்று கோலாய்

நான் நிற்க ...

என்னையே பற்றி படர்ந்தாள் !



சான்று சொல்ல

நினைக்கையில் ...

அன்னியப் பார்வையில் ஐக்கியமானாள் !



கசங்கிய அவள்

கண்ணை ...

கசக்கியபடி வந்து சேர்ந்தாள் !



வருந்தி அழுததில்

என் இதயம் ...

ஓட்டை ஆனது !



வழிந்த என்

ரத்தத்தில் ... - மீண்டும்

வளரத் துவங்கினாள் !



அந்த வஞ்சிக் கொடி ...

நானோ கேள்விக் குறி !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக