ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

மனசு .......


தவறு செய்த
என் மகளை
தவறி அடிக்க
முடிந்த என்னால் .... ஏனோ ...



தவறாமல்
அழாது இருக்க
முடியவில்லை !


ஒவ்வொரு முறையும்
என் கைதனை
பார்த்து வருத்தப் படுகிறேன் !



"நீ ....
என்னையும் மீறி
சில நேரம்
எல்லை மீறி விடுகிறாய்" என !




என் செய்வேன்...
அழாதே என்று சொல்ல மனம்
தயார்தான் - ஆனால்

கண்ணீர் துடைக்க ......
கை அல்லவா
கடமை மறந்து
கயமை பாராட்டுகிறது !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக