தவறு செய்த
என் மகளை
தவறி அடிக்க
முடிந்த என்னால் .... ஏனோ ...
தவறாமல்
அழாது இருக்க
முடியவில்லை !
ஒவ்வொரு முறையும்
என் கைதனை
பார்த்து வருத்தப் படுகிறேன் !
"நீ ....
என்னையும் மீறி
சில நேரம்
சில நேரம்
எல்லை மீறி விடுகிறாய்" என !
என் செய்வேன்...
அழாதே என்று சொல்ல மனம்
தயார்தான் - ஆனால்
கண்ணீர் துடைக்க ......
கை அல்லவா
கடமை மறந்து
கயமை பாராட்டுகிறது !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக