சனி, 28 மே, 2011

கவிஞனின் பார்வை

பிறந்த நாள் : ஜூன் 20.

(என்னுடைய பிறந்த நாளும் )


கால மகள்

கண் புதைந்தாள் !


இரவு மோகினி எங்கும்

உடல் விரிக்கிறாள் !


நிலாப் பெண்
வின் மீன்களை
விற்பனை செய்கிறாள் !

மோகக் கதிரவன்
மென் பனியை
மெல்ல மேய்ந்து போகிறான் !

புல் மூக்கின் நுனியில்
வைர மூக்குத்தி
விடிய வந்த சூரியன்
களவாடிப் போகிறான் !

பிளவு பட்ட உயிர்

மறு பிறப்பு எடுத்தது !


பார்வைகள் ....... இது
கவிஞனின் பார்வைகள் !!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக